மின் தடையை நீக்க லஞ்சம்... மின்வாரிய ஊழியர் சஸ்பெண்ட்!

ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டம் பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். விவசாயி. இவரது தோட்டத் துக்கான மின் விநியோகம் கடந்த 15 நாட்களுக்கு முன் தடைபட்டது. இது தொடர்பாக புகார் அளித்தும், நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் மின் தடையை சரி செய்ய ரூ.1,000 லஞ்சம் தர வேண்டும் என அப்பகுதியில் பணிபுரியும் மின்வாரிய ஊழியர் மணி கண்டன் கேட்டுள்ளார். இதன்படி, அவருக்கு விவசாயி செந்தில், ரூ.1,000 லஞ்சமாக வழங்கியுள்ளார். அதனை தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதையடுத்து லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில், மணிகண்டனை பணியிடை நீக்கம் செய்து மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!