கல்யாணமாகி 4 நாள் தான் ஆச்சு... புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை.. கதறித் துடிக்கும் பெற்றோர்!

 
பிரியா

தற்கொலை எதற்கும் தீர்வாகாது. ஆனால் தற்போதைய இளசுகள் சவால்கள், சங்கடங்களை எதிர்த்து போராடி ஜெயிக்கும் திறனின்றி சவலைப்பிள்ளைகளாக இருக்கின்றனர். இதனால் உருவாகும் மன அழுத்தத்தினால் விபரீத முடிவுகளை எடுத்துவிடுகின்றனர். இதன் பிறகு பெற்றோரின் நிலையை கருத்தில் கொள்வதே இல்லை என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நொச்சியோடைபட்டி கிராமத்தில் வசித்து வருபவர் முருகேசன். இவரின் மகள் 19 வயது  பிரியா .

5வது திருமணம்

  இவர் அங்குள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.  தேனி மாவட்டம்  கூடலூர் பகுதியில் வசித்து வருபவர்  கமலக்கண்ணன். இவர் கம்பத்தில் ஓர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார். பிப்ரவரி 11ம் தேதி இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.இந்த திருமணத்தில்   பிரியாவுக்கு விருப்பம் இல்லை எனத் தெரிகிறது.  பெற்றோரின் கட்டாயத்தின் பேரில் திருமணம் நடைபெற்றதாக  உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.  திருமணம் முடிந்து மணமகன் வீட்டுக்கு சென்ற புதுமணத் தம்பதிகள் மறுவீட்டுக்காக  செவ்வாய்க்கிழமை  திண்டுக்கல் வருகை தந்துள்ளனர். 

ஆம்புலன்ஸ்

 


 செவ்வாய் இரவில் தம்பதிகள் தனித்தனியே உறங்கிக் கொண்டிருந்த  நிலையில், புதன்கிழமை காலை பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காலையில் எழுந்தபோது கமலக்கண்ணன் மனைவி தூக்கில்  தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  தகவலின் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர்   பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. திருமணமாகி 4 நாட்களே ஆன நிலையில்  இந்த தற்கொலை குறித்து ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web