BUDGET 2025-26 | 10 அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட நிதிநிலை அறிக்கை!

 
நிர்மலா சீதாராமன்


இன்று 8வது முறையாக 2025-26-ஆம் நிதியாண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.

எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே திருக்குறளுக்கு பதிலாக தெலங்கு கவிதையை கூறி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025-26ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை பெண்கள், ஏழைகள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் நலன் என பத்து அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

நிர்மலா சீதாராமன்

உலகயளவில் நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது.

விவசாயம் நாட்டின் முதுகெலும்பாக விளங்குகிறது. வேளாண் உற்பத்தியை பெருக்க முக்கியத்துவம் அளிக்கப்படும்.

தனம், தானிய கிஷான் யோஜனா திட்டம் மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.

தாமரை விதைகளுக்காக புதிய வாரியம் பிகாரில் அமைக்கப்படும்.

நிர்மலா சீதாராமன்

அசாமில் யூரியா உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படும்.

பருத்தி உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம். சிறந்த வகை பருத்தி சாகுபடியை ஊக்குவிக்க திட்டம்.

கிசான் கடன் அட்டை மூலம் கூடுதல் கடன் வசதி.

நாடு முழுவதும் கிராமப்புறங்களில் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் உருவாக்கப்படும்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web