4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து... 10 பேர் பரிதாப பலி... நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ!

 
மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா  மாநிலம் தானே மாவட்டம் பிவண்டி நகரில் உள்ள பாலாஜி நகர் பகுதியில் 4 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. பழமையான இந்தக் கட்டிடத்தில் சுமார் 48 அறைகள் இருந்த நிலையில், இதன் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் திடுக்கிடும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மோப்ப நாய் மற்றும் கனரக இயந்திரங்களின் உதவியோடு இடிபாடுகளை அகற்றிச் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. இடிபாடுகளுக்குள் இருந்து 10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதுடன் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதியை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு அரசுச் செலவில் சிறப்பான மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

Bhiwandi Building Collapse: 10 Dead as 'Dangerous' Structure Under Illegal Repairs Crashes | Daily Pioneer

கடந்த 2020-ஆம் ஆண்டிலேயே இந்தக் கட்டிடம் ஆபத்தானது என மாநகராட்சி நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் உரிய அனுமதி பெறாமல் அண்மையில் கட்டிடத்தில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. விதியை மீறிச் சீரமைப்புப் பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர் மீது வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த பகுதியின் அருகே உள்ள மற்ற கட்டிடங்களில் வசித்த பொதுமக்களும் முன்னெச்சரிக்கையாகப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். மீட்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில் இச்சம்பவம் குறித்துத் தொடர்ந்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.