சீறிப் பாய்ந்த மாட்டு வண்டிகள்... விளாத்திகுளத்தில் எல்கை பந்தயம்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள A.குமாரபுரத்தில் காளியம்மன் கோவில் பொங்கலை முன்னிட்டு மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
சிறிய மாடு மற்றும் பூஞசிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் திருநெல்வேலி, இராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 54 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.
6 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற சிறிய மாட்டுவண்டி போட்டியில் 17 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாட்டு வண்டி முதலிடத்தினை பெற்றது. 4 கிலோமீட்டர் தொலைவில் 37 பூஞ்சிட்டு மாட்டு வண்டிகளுக்கு இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியிலும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாட்டு வண்டி முதல் பரிசினை வென்றது.
இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிபாய்ந்த காளைகளை மாட்டு வண்டி பந்தய ரசிகர்கள் சாலையின் இருபுறமும் கூடியிருந்து ஆர்வமுடன் கண்டு களித்தனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!