பேருந்து டேங்கர் லாரியில் மோதி 21 பேர் உடல் கருகி பலி! 16 பேர் கவலைக்கிடம்!!
பாகிஸ்தானில் கராச்சியில் இருந்து இஸ்லாமாபாத்திற்கு 40 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து எதிரில் எரிபொருள் ஏற்றி வந்த லாரியின் மீது திடீரென மோதியது. இதனால் பேருந்தும் வேனும் தீப்பற்றி எரிந்தன.இந்த பேருந்தில் இருந்தவர்கள் அலறி துடித்து தீயில் கருகி சாம்பலாகினர்.
ஒரு சிலர் படுகாயங்களுடன் பேருந்தை விட்டு இறங்கிவிட்டனர். மீதம் உள்ள அனைவரும் இறங்க முடியாமல் தீயில் கருகி உயிரிழந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காவல் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இந்த கோர விபத்தில் குழந்தைகள், பெண்கள் பேருந்து மற்றும் வேன் ஓட்டுநர்கள் உட்பட 21 பேர் பலியாகினர்.
16 பேர் படுகாயம் அடைந்தனர். அதில் சிலரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க