மழைக்காலங்களில் தயிர் சாப்பிடலாமா?!

 
மழை மற்றும் குளிர் காலங்களில் தயிர் சாப்பிடலாமா கூடாதா?

மழையை ரசிக்காதவர்களே பெரும்பாலும் இல்லை எனலாம். அதே நேரத்தில் மழைக்கால நோய்கள், கட்டுப்பாடுகள் , தடுப்பு முறைகளுக்கு சலிப்படையாதவர்களும் கிடையாது.  ஆனால் தயிர் பிரியர்களுக்கு மழைக்காலம் வந்து விட்டாலே பெரும் சந்தேகங்கள் முளைக்கத் தொடங்கிவிடும். மழை வெளியில் கொட்டிக் கொண்டிருக்கும் போது தயிர் சாப்பிட்டால் சளி, இருமல், ஜலதோஷம் வந்துவிடுமோ என்ற பயம் வந்து விடும். அதிலும் வீடுகளில் குழந்தைகள் , பெரியவர்கள் இருந்துவிட்டால் பெரும் சவால் தான். அவர்கள் விரும்பியதை கொடுக்கவும் தயக்கம். வேண்டாம் என சொல்லவும் முடியாது. 

ஆரோக்கியக்குறைபாடு வந்துவிடக்கூடாதே என்ற அக்கறையும் சேரும்.  மழை குளிர் காலங்களில் வீட்டிற்குள் கம்பளி போன்ற போர்வைகளுக்குள் ஒளிந்து கொள்வது சுகம் தான் .இருந்த போதிலும் உடல் ஆரோக்கியத்திற்கு சவாலான கால காட்டம்.இந்த காலங்களில் தொற்று நோய்கள் எளிதில் பரவும் அபாயம் உண்டு.

தமிழர்களின் பாரம்பரிய உணவு தயிர் தான். மதிய நேரத்தில் என்னதான் சாம்பார், காரக்குழம்பு, ரசம், பிரியாணி என என்னதான் சாப்பிட்டாலும் கைப்பிடி அளவு தயிர் சாதம் சாப்பிட்டால் தான் வயிறு குளிரும். மழைக்காலத்தில் தயிர் சாப்பிட ஆசைப்பட்டால் அத்துடன்  ஒரு சிட்டிகை சீரக தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து சாப்பிடலாம். முதல் நாள் தோய்த்த ப்ரெஷ்ஷான தயிரை தான் சாப்பிட வேண்டும்.  பழைய தயிரை  தவிர்க்க வேண்டியது அவசியம். 

மழை மற்றும் குளிர் காலங்களில் தயிர் சாப்பிடலாமா கூடாதா?


அதை தாண்டியும் தயிர் பிரியர்கள் ஏராளம் இவர்கள் என்ன தான் குழம்பு காய் வைத்து சாப்பிட்டாலும் தயிர் சாப்பிட்டால் தான் திருப்தி. ஆனால் தயிரை மழை மற்றும் குளிர் காலத்தில் எடுக்கலாமா வேண்டாமா என்பதில் குழப்பமே நீடிக்கிறது.

மழை மற்றும் குளிர் காலங்களில் தயிர் சாப்பிடலாமா கூடாதா?


மழை மற்றும் குளிர் காலங்களில் தயிர் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்கும் என்பது முற்றிலும் தவறான கருத்து. தயிரில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அதிகம். ஆனால் ஒரு சிலர் தயிரை தவிர்ப்பது நல்லது என்கிறது ஆயுர்வேதம்.ஆஸ்துமா , சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள் தயிரை தவிர்ப்பது நல்லது. மற்றவர்கள் எப்போதும் போல் தினசரி தயிரை அளவாக சேர்த்துக் கொள்ளலாம். தயிரை காட்டிலும் அதிலிருக்கும் கொழுப்பு நீக்கிவிட்டு மோராக சேர்த்துக் கொள்வது நன்மை பயக்கும். மோரை எல்லாக் காலங்களிலும் பயன்படுத்தலாம் என்கின்றனர் மருத்துவர்கள். தயிரை அளவோடு சேர்த்து ஆரோக்கியம் காண்போம்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web