நெகிழ்ச்சி... புற்றுநோயால் படுக்கையில் விழுந்த காதலி... மருத்துவமனையிலேயே தாலிகட்டிய காதலன்!
மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் கடந்த 2 ஆண்டுகளாகத் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இருவீட்டுப் பெற்றோரும் பச்சைக்கொடி காட்டிய நிலையில், திருமணத்திற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வந்தன. இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக அந்தக் காதலிக்கு இறுதி கட்டப் புற்றுநோய் பாதிப்பு இருப்பது மருத்துவப் பரிசோதனையில் கண்டறியப்பட்டு, அவர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
लड़का और लड़की चार साल से रिलेशनशिप में थे अचानक लडकी का तबीयत खराब होता है
— ROHIT SINGH (@desHi__chora) May 29, 2026
हॉस्पिटल ले जाते तो पता चलता कैंसर है और लास्ट स्टेज में पहुंच चुकी है बचने का चांस नही है
जैसे ही लड़का को पता चलता लड़का आता है और बोला मुझे हर जन्म में तुम ही चाहिए और रोते हुए मांग में सिंदूर भर… pic.twitter.com/HY9P3wNzqY
இளம்பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, அவர் இன்னும் சில நாட்கள் மட்டுமே உயிரோடு இருக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தாலும், தனது காதலி மீது கொண்ட மாறாத அன்பின் காரணமாக அந்த இளைஞர் தனது திருமண முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. தனது காதலியின் இறுதி ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை வார்டிலேயே வைத்து அவரைத் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார்.
இதன்படி இருதரப்பு உறவினர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் முன்னிலையில், படுக்கையில் இருந்த காதலிக்கு அந்த இளைஞர் கண்ணீருடன் தாலிகட்டி மனைவியாக ஏற்றுக்கொண்டார். நோயின் கொடுமையிலும் மணக்கோலத்தில் புன்னகைத்த அந்தப் பெண்ணின் முகமும், காதலனின் இந்த உன்னதமான பாசமும் அங்கிருந்த அனைவரையும் உருக வைத்தது. இந்த நெகிழ்ச்சியான திருமணப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பார்ப்போரை நெஞ்சம் நெகிழச் செய்துள்ளது.
