சென்னையில் ரூ.11.61 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் - பெரம்பூர், ஆர்.கே.நகர் தொகுதிகளில் சிக்கிய பணமுடிப்புகள்!

 
பணம் ரொக்கம் சோதனை பறிமுதல் பணம் ரொக்கம் சோதனை பறிமுதல்

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், சென்னையில் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகனச் சோதனையில் கணக்கில் வராத லட்சக்கணக்கான ரூபாய் பணம் சிக்கியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் ரூ.10 ஆயிரத்திற்கு மேற்பட்ட மதிப்புள்ள பொருட்கள் மற்றும் ரூ.50 ஆயிரத்திற்கு மேற்பட்ட ரொக்கப் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்படும். சென்னை மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளைக் கண்காணிக்க தலா 48 பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் 24 மணிநேரமும் தீவிரப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சோதனை தேர்தல் நடத்தை விதிமுறைகள் விதிகள்

நேற்று சென்னையில் நடைபெற்ற பல்வேறு வாகனச் சோதனைகளில் மொத்தம் ரூ.11,61,100 பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. பெரம்பூர் தொகுதியில் அதிகபட்சமாக ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. துறைமுகம் தொகுதியில் ரூ.4 லட்சத்து 16 ஆயிரம் சிக்கியது. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் ரூ.94 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணங்களை வைத்திருப்பவர்கள், அதனை மேல்முறையீட்டுப் பிரிவிடம் சமர்ப்பிக்கலாம். விசாரணையில் ஆவணங்கள் உண்மையானவை என்று நிரூபிக்கப்பட்டால், பறிமுதல் செய்யப்பட்ட பணம் மீண்டும் உரிய நபரிடமே ஒப்படைக்கப்படும் எனத் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வருமான வரி சோதனை

பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிக அளவிலான ரொக்கப் பணத்தைக் கொண்டு செல்லும்போது, அதற்கான வங்கிப் பரிவர்த்தனை ஆவணங்கள் அல்லது முறையான ரசீதுகளைக் கையில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.