இரண்டு லாரிகளின் நடுவில் செல்ல முயன்ற பேருந்து.. கோர விபத்தின் சிசிடிவி காட்சி வைரல்..!!

 
ஈரோடு விபத்து

ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பாதையில் லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பாதையில் வரட்டுப்பள்ளம் அணைப்பகுதியில் நேற்று முன்தினம் கர்கேகண்டியில் இருந்து பவானி நோக்கி வந்த தனியார் பேருந்து, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி கர்நாடக மாநிலம் சென்று கொண்டிருந்த லாரி மீதும் மோதி விபத்துக்குள்ளானது. 


இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த சிசிடிவி காட்சிப்பதிவில் பர்கூர் மலைப்பாதையில் லாரி ஒன்று பிரேக் டவுன் ஆகி இடது புறமாக நின்று கொண்டு இருந்துள்ளது, அப்போது தனியார் பேருந்தின் ஓட்டுநர் நின்று செல்லாமல் வேகத்தில் அதனை ஓவர்டேக் செய்த போது, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீதும் தொடர்ந்து லாரி மீதும் மோதி விபத்துக்குள்ளானது.

அசுர வேகம்… லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்து… பர்கூர் மலைப்பாதையில்  நிகழ்ந்த சம்பவம் ; ஷாக் சிசிடிவி காட்சிகள்…!! - Update News 360

இந்த விபத்தில் பைக் ஓட்டி வந்த நபர், லாரி ஓட்டுநர் படுகாயம் அடைந்தனர். பேருந்தில் இருந்த பயணிகள் சிலர் லேசான காயமடைந்தனர்.

From around the web