நாளை கடைசி தேதி... ஐடிஐ படித்தவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

 
மத்திய அரசு வேலை

ஐடிஐ படித்து தேர்ச்சியடைந்தவர்களுக்கு மத்திய அரசின் தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் (NHPC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை மார்ச் 20ம் தேதி கடைசி நாளாகும்
தேசிய நீர்மின் கழகத்தில் ஐடிஐ பயிற்சி ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க மார்ச் 20 கடைசி நாளாகும்.

வேலை வாய்ப்பு

சர்வேயர் 5, எலெக்ட்ரீசியன் 5, பிட்டர் 2, பிளம்பர் 2, வெல்டர் 2, தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் கணினி பராமரிப்பு 2 என மொத்தம் 24 பணியிடங்கள் நிரப்பட உள்ளன.இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வயதானது 01.03.2024 தேதியின் படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும். அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/தொழில்நுட்பக் கல்வி வாரியத்தில் இருந்து பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் ஐஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வேலை வாய்ப்பு


https://www.nhpcindia.com/assests/pzi_public/pdf_link/65e5994e221c3.pdf
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் வரும் 20.03.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web