இன்று முதல் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

 
மழை

இன்று முதல் தமிழகத்தில் அடுத்து வரும் 4 நாட்களுக்கு தற்போது நிலவி வரும் மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

அதே சமயம் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கமானதை விட ஓரிரு டிகிரிகள் அதிகரித்து 42 டிகிரி செல்சியஸ் வரையில் இருக்கக்கூடும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலை காரணமாக வெப்ப அழுத்தம் ஏற்படலாம்.

மழை

அதனால் பொதுமக்கள் குறிப்பாக வயதானவர்கள், குழந்தைகள் வெயில் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்த்து விடுங்கள். கூடுமானவரை உடலில் நீர்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக காலை 11 மணி  முதல் 4 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்த்து விடுங்கள். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web