சந்திராயன் 3 நிலவில் தரையிறங்கும் நிகழ்வு நேரலையில்!! இஸ்ரோ அதிரடி!!
நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சிசெய்வதற்காக சந்திராயன் 2 விண்கலம் ஏவப்பட்டுள்ளது. இந்த விண்களம் திட்டமிட்டபடி தரையிறங்க இருப்பதாக தகவல்கள்வெளியாகியுள்ளன. சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவின் தென் துருவத்தை எட்டும் அந்த நிகழ்வை நேரலையில் காணவும் இஸ்ரோ வழிவகை செய்துள்ளது.சந்திரயான் 3 விண்கலத்திற்கு போட்டியாக ரஷ்யா லூனா 25ஐ ஏவியது. ஆனால் லூனா திட்டமிட்டபடி நிலவை எட்ட முடியவில்லை.
இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்து விட்டன. ரஷ்யாவின் கணிப்புகளை பொய்யாக்கி, சனி இரவு நிலவின் பரப்பில் மோதி சிதைந்து சுக்கு நூறாய் நொறுங்கி விட்டது. இதனால் இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத்தின் வெற்றி மீது சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பு நீடித்து வருகிறது.சந்திராயன் 3 நாளை மறுநாள் ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 6 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவின் பரப்பில் பாதம் பதிக்க உள்ளது. தற்போது நிலவின் நீள்வட்ட சுற்றுப்பாதையில் பயணிக்கும் விக்ரம் லேண்டர், நிலவை நெருங்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி சுமார் 25 கிமீ அளவில் நெருங்கிஇருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்கா, சோவியத் ரஷ்யா, சீனா என நிலவை எட்டியுள்ள நாடுகள் அனைத்துமே இதுவரை அதன் வடதுருவத்திலேயே தடம் பதித்துள்ளன. முதல்முறையாக தென் துருவத்தை எட்டப்போகும் தேசமாக இந்தியா, வரலாற்று சாதனை படைக்க உள்ளது. இந்த சாதனையை நேரலையாக காண இஸ்ரோ வழிவகை செய்துள்ளது.இதன்படி ஃபேஸ்புக், எக்ஸ் தளம்(ட்விட்டர்), யூடியூப் என இஸ்ரோவின் சமூக வலைதள பக்கங்களிலும், தூர்தர்ஷன் டிவி மூலமாகவும் சந்திரயான் சாதனையை நேரலையில் காணலாம். மேலும் தூர்தர்ஷன் ஒளிபரப்பை செயற்கைக்கோள் தொலைக்காட்சிகள் பலவும் நேரலையாக ஒளிபரப்ப திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க