நிலவின் அருகே சென்றது சந்திரயான் 3... முதல் புகைப்படம் வெளியானது!
சந்திரயான் 3, சந்திரனின் நீள்வட்டச் சுற்றுப்பாதையில் பயணித்து, விண்கலத்தின் சுற்றுப்பாதையின் அளவு வெற்றிகரமாக குறைக்கப்பட்டு நிலவுக்கு அருகே கொண்டு செல்லப்பட்டுள்ளது. சந்திரயான் 3 நிலவின் முதல் புகைப்படத்தை எடுத்து அனுப்பியிருந்ததாக இஸ்ரோ வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 என்ற விண்கலத்தை கடந்த மாதம் 14-ம் தேதி எல்.வி.எம்.-3-எம்-4 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது. முதலில் புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப் பட்ட சந்திரயான் 3 பின்னர், பூமியில் இருந்து குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 36,500 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் சுற்றத் தொடங்கியது.
The Moon, as viewed by #Chandrayaan3 spacecraft during Lunar Orbit Insertion (LOI) on August 5, 2023.#ISRO pic.twitter.com/xQtVyLTu0c
— LVM3-M4/CHANDRAYAAN-3 MISSION (@chandrayaan_3) August 6, 2023
இந்த நீள்வட்ட சுற்றுப்பாதையை படிப்படியாக உயர்த்தி விண்கலம் நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லப்பட்டது. கடந்த 1-ம் தேதி புவி வட்டப்பாதையின் இறுதிச்சுற்றை வெற்றிகரமாக நிறைவு செய்த சந்திரயான் -3 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதை நோக்கிய பயணத்தை தொடங்கியது. கடந்த 5-ம் தேதி நிலவின் சுற்றுப்பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்தது.
நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சுற்றி வரும் சந்திரயான் 3 விண்கலம், அதிகபட்சம் 18 ஆயிரம் கிலோ மீட்டராகவும், குறைந்தபட்சம் 100 கிலோ மீட்டர் என்ற அளவிலும் நிலவு சுற்றுப்பாதையில் சுற்றி வருகிறது. இந்நிலையில், சந்திரயான் - 3 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதை உயரத்தை குறைக்கும் முதற்கட்டப்பணி நேற்று இரவு நடைபெற்று வெற்றிகரமாக முடிந்துள்ளது.
இதன் மூலம் சந்திரயான் - 3 விண்கலம் நிலவின் அருகே சென்றுள்ளது. அடுத்தகட்டமாக சுற்றுவட்டப்பாதை உயரத்தை குறைக்கும் பணி வரும் 9ம் தேதி மதியம் 1 மணி முதல் 2 மணி அளவில் நடைபெற உள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும், சந்திரயான் - 3 விண்கலம் நிலவின் அருகே சுற்றி வரும் வீடியோவையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது. சந்திரயான் - 3 விண்கலத்தை வரும் 23ம் தேதி நிலவின் மேற்பரப்பில் சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறக்க இஸ்ரோ தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?