ரயில் சேவையில் மாற்றம்!! பயணிகளே குறிச்சிக்கோங்க!!
ஒடிசாவில் நடைபெற்ற கோர ரயில் விபத்துக்கு பிறகு நாடு முழுவதும் ரயில் பாதைகள் சீரமைக்கப்பட்டு பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மயிலாடுதுறையில் இருந்து திருச்சி செல்லும் வழித்தடங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் அனைத்து விரைவு ரயில்களும் இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
திருச்சியில் இருந்து விருத்தாச்சலம், வேளாங்கண்ணியில் இருந்து திருச்சி மற்றும் மயிலாடுதுறையில் இருந்து கோவை செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருச்சியில் இருந்து மாலை 3.45 மணிக்கு திருப்பாதிரிப்புலியூர் புறப்பட வேண்டிய ரயில் , மாலை 4.28 மணிக்கு புறப்படும். திருச்சியில் இருந்து மாலை 6 மணிக்கு விருதாச்சலம் புறப்பட வேண்டிய ரயில் லால்குடியில் இருந்து மாலை 6.53 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மயிலாடுதுறையில் இருந்து பிற்பகல் 2.25 மணிக்கு கோவைக்கு புறப்படும் ரயில் திருச்சியில் இருந்து மாலை 4.50 மணிக்கு கோவைக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?