சென்னை மாநகராட்சி அதிரடி... கட்டுமான பணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

 
கட்டுமான பணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

 
சென்னை மாநகராட்சி மாமன்ற மாதாந்திர கூட்டத்தில், கட்டுமான பணிகள் குறித்த  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில்  வழிகாட்டுதல்களை பின்பற்றாத கட்டடங்களுக்கு ரூ30000 முதல் ரூ 5 லட்சம்  வரை அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
20000  சதுரமீட்டருக்கு அதிகமான பரப்பளவு உள்ள தளங்களில் வழிகாட்டுதல் விதிகளை மீறினால் 5 லட்சம் ரூபாயும், ஐநூறுக்கு மேல் 20 ஆயிரம் சதுர மீட்டர் வரை பரப்பளவு கொண்ட தளங்களுக்கு 50000மும்  அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
300 முதல் 500 சதுரமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள தளங்களில் வழிகாட்டு விதிமீறலுக்கு ரூ30000 அபராதம் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நடுத்தர மற்றும் குறைந்த முக்கியத்துவம் கொண்ட வழிகாட்டுதல்களில் விதிமீறல்கள் ஏற்பட்டால் 10 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும் எனவும்  தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபடும் தளங்களின் கட்டுமான நடவடிக்கைகளை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
From around the web