புதிய அமைச்சரவையில் சென்னைக்கு மட்டும் 7 அமைச்சர்கள் தேர்வு!

 
தமிழகம் விஜய் தலைமைச் செயலகம் தலைமை அரசு தமிழ்நாடு தமிழகம் விஜய் தலைமைச் செயலகம் தலைமை அரசு தமிழ்நாடு

முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய தமிழக அமைச்சரவையில், தலைநகர் சென்னை மாவட்டத்திற்குப் பெரும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த அமைச்சரவையில் சென்னையில் இருந்து மட்டுமே முதலமைச்சர் உட்பட மொத்தம் 7 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த மே 10-ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்டப் பதவியேற்பு விழாவின் போது, சென்னையில் இருந்து 5 முக்கியப் புள்ளிகள் அமைச்சரவையில் இடம் பிடித்திருந்தனர். முதலமைச்சர் விஜய், ஆதவ் அர்ஜுனா (அமைச்சர்), என்.ஆனந்த் (அமைச்சர்), வெங்கடராமன் (அமைச்சர்), ராஜ்மோகன் (அமைச்சர்). இந்நிலையில் இன்றைய விரிவாக்கத்தில் மேலும் 2 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ராஜ்மோகன்

இன்று காலை 10 மணிக்கு சென்னை மக்கள் மாளிகையில் நடைபெற உள்ள 23 பேர் கொண்ட அமைச்சரவை விரிவாக்கப் பட்டியலில், சென்னையில் இருந்து என்.மரிய வில்சன் – ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.. ஆர்.குமார் – வேளச்சேரி தொகுதி எம்.எல்.ஏ. என மேலும் இரண்டு தவெக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரின் சேர்க்கையையும் சேர்த்து, தவெக அமைச்சரவையில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

தவெக எம்.எல்.ஏ. ஆனந்த் வெங்கட்ராமன்

தலைநகர் சென்னையின் உள்கட்டமைப்பு, போக்குவரத்து, குடிநீர் விநியோகம் மற்றும் மழைநீர் வடிகால் உள்ளிட்ட முக்கியப் பணிகளை அதிவேகமாக முன்னெடுக்கவும், சென்னை மக்கள் மத்தியில் கட்சியின் செல்வாக்கைத் தக்கவைக்கவும் சென்னை மாவட்டத்திற்கு இந்த அசுர பலம் வழங்கப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.