கொடூரம்... மார்பு, அந்தரங்க உறுப்புகள் சிதைக்கப்பட்டு இளம்பெண் சடலமாக மீட்பு!

 
யஷஸ்ரீ
 

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள உரான் தாலுகாவில் சிதைந்த நிலையில் யஷஸ்ரீ ஷிண்டே என்ற 22 வயது இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவரது அந்தரங்க உறுப்புகள், பிறப்புறுப்பு, மார்புப் பகுதி உள்ளிட்டவை கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கிழிக்கப்பட்டுள்ளன.கடந்த இரண்டு நாட்களாக அவளை காணவில்லை என்று அவரது பெற்றோர் புகாரளித்திருந்த நிலையில், இன்று யஷஸ்ரீ சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஆம்புலன்ஸ்

அவரது சடலத்தை பிரேத பரிசோதனைக்காக போலீசார் கைப்பற்றியுள்ளனர். தங்களது மகளை தாவூத் ஷேக் என்பவர் கொலை செய்துள்ளதாக இளம்பெண்ணின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.முன்னதாக, சாலையில் ஒரு பெண்ணின் சடலம் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாகவும், தெருநாய்கள் அதைத் தின்றுக் கொண்டிருப்பதாகவும் போலீசாருக்கு போன் வந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டனர். இறந்த உடலில் அவரது மார்பு, இடுப்பு, முதுகு மற்றும் அவரது அந்தரங்க பகுதிகளில் பல கத்திக் காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. மருத்துவ அறிக்கைகளில் அவரது எலும்புகள் உடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உத்தரபிரதேச போலீஸ்
காவல்துறையின் கூற்றுப்படி, தாவூத் 2019ம் ஆண்டில் யஷாஸ்ரீ மைனராக இருந்தபோது பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறி கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்ததும், அவர் கர்நாடகாவில் உள்ள தனது சொந்த ஊருக்குச் சென்றார். இருப்பினும், அவர் குற்றம் சாட்டப்பட்டவருடன் பல மணி நேரம் பேசிக் கொண்டிருந்ததாக செல்போன் அழைப்பு பதிவுகள் தெரிவிக்கின்றன.
அவரது இருப்பிடத் தரவுகளின் மூலம் சரிபார்க்கப்பட்டபடி, அவர் ஊரானுக்குப் பயணம் செய்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர். அங்கு அவர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்வதற்கு முன்பு அவளைக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.


தாவூத்தை கைது செய்ய போலீஸ் குழுக்கள் கர்நாடகாவிற்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட பிறகுதான் கொலைக்கான காரணம் தெரியவரும்.முன்னதாக ஜூலை 25ம் தேதி (வியாழக்கிழமை) யஷஸ்ரீ ஷிண்டே காணாமல் போனது குறித்து அவரது பெற்றோரால் முதலில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இரண்டு நாட்களுக்குப் பிறகு, சனிக்கிழமை அவரது உடல் மிகவும் பயங்கரமான நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடலில் பல காயங்கள் பதிவாகியுள்ளன. அவளது தோள்பட்டை சதையைக் கூட தெருநாய்கள் கடித்ததால் அவள் முகம் சிதைந்தது. அவள் ஆடை மற்றும் பச்சை குத்தப்பட்டதன் மூலம் அடையாளம் காணப்பட்டாள்

From around the web