பிரபல பாடகிக்கு செவாலியே விருது!! குவியும் பாராட்டுக்கள்!!

 
அருணா சாய்ராம்

இசை உலகின் ராக் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் அருணா சாய்ராம். இவர் பத்மஸ்ரீ, சங்கீத கலாநிதி உட்பட பல  உயரிய விருதுகளை இதுவரை பெற்றுள்ளார். இவர் இசை உலகிற்கு ஆற்றிய அரும் பணிக்காக இவருக்கு செவாலியே விருது வழங்கி பிரான்ஸ் அரசு கௌரவிக்கிறது. ஜூலை 15ம் தேதி  அருணா சாய்ராமுக்கு  உலகில் பெரிய அளவில் மதிக்கப்படும் விருதான  பிரான்ஸ் நாட்டின் மிகப் பெரிய விருது  செவாலியர் விருது  அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

அருணா சாய்ராம்


 தமிழ் திரையுலகை பொறுத்தவரை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இதற்கு முன்னர் செவாலியே விருதை பெற்றுள்ளார். அவருக்கு பின் இந்த விருது, அருணா சாய்ராமுக்கு வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அவர் கூறுகையில், மும்பையில் சிறு வயது முதல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த படங்களை அங்குள்ள திரையரங்குகளில்  பார்த்து ரசித்துள்ளேன். நடிகர் திலகத்தின் மிகப் பெரும் ரசிகையான  நான், அவர்  பெற்ற விருதை  பெறுவது  எனக்கு கிடைத்த  மிகப்பெரிய கௌரவம்  என தெரிவித்துள்ளார்.  

அருணா சாய்ராம்

கர்நாடக இசைப் பாடகர், இசையமைப்பாளர் மற்றும் பேச்சாளரான அருணா சாய்ராம், பிரான்ஸ் அரசின் உயரிய கௌரவமான செவாலியர் விருதை தான் பெறுவதற்கு காரணமான தனது ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். அவருடைய இசை ஆர்வம் மற்றும் திறமைக்காக மட்டுமல்லாது   இந்திய-பிரான்ஸ் உறவின் வளர்ச்சிக்காக அருணா சாய்ராம் ஆற்றிய பங்களிப்பிற்காகவும் இந்த விருதுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web