திருப்பதியில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தரிசனம்!

 
திருப்பதி இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் திருப்பதி இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்

இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இரண்டு நாள் பயணமாகத் திருப்பதிக்கு வருகை தந்தார். நேற்று தனது மனைவியுடன் திருப்பதி வந்த அவர், முதலில் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்குக் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருப்பதி

பயணத்தின் இரண்டாம் நாளான இன்று காலை, ஞானேஷ் குமார் தனது மனைவியுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் அவருக்குப் பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர். தரிசனத்திற்குப் பிறகு ரங்கநாயகுல மண்டபத்தில் அவருக்குப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தேர்தல்கள் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்ததற்குத் தனது நன்றியைத் தெரிவிக்கும் விதமாக இந்த ஆன்மீகப் பயணம் அமைந்தது.

இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்!! திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை!!

தரிசனத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஞானேஷ் குமார், தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தேர்தல் பணிகள் திருப்திகரமாக அமைந்ததாகத் தெரிவித்தார். ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் வாக்காளர்களின் பங்கு மிக முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார். ஏழுமலையான் தரிசனம் முடித்த பின், அவர் தனது குழுவினருடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.