10ம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில் இந்த கேள்வியை அட்டெண்ட் செய்தாலே மதிப்பெண்!

 
விடைத்தாள்கள் திருத்தும் பணி

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்பட்டது.  சமூக அறிவியல் பாடத்தில் ஒரு மதிப்பெண் வினாக்கள் பிரிவில் 4 வது கேள்விக்கு பதில் அளித்து இருந்தாலே  ஒரு மதிப்பெண் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கான சமூக அறிவியல் பொதுத்தேர்வு ஏப்ரல் 15ம் தேதி நடைபெற்றது.

விடைத்தாள்கள் திருத்தும் பணி

இந்த தேர்வில் ஒரு மதிப்பெண் வினாக்கள் பிரிவில் 4வது கேள்வியில், ஜோதிபா பூலே குறித்த  கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. அதற்கான விடைகள் முரணாக இருந்தன. இதையடுத்து இந்த கேள்விக்கு பதில் அளித்திருந்தாலே மதிப்பெண் வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் இன்று 10ம் வகுப்பு சமூக அறிவியல் பொதுத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது.  இந்நிலையில், நான்காவது கேள்விக்கு விடை அளித்து இருந்தாலே அதற்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும் என அரசு தேர்வுகள் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web