வகுப்பறையில் மயங்கி சரிந்து 8ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!

 
மாரடைப்பு

 
திருச்சி மாவட்டம், லால்குடி  தச்சன் குறிச்சி பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர்  முருகானந்தம்.இவருடைய 13 வயது மகன்  வெற்றிவேலன். இவர் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.

ஆம்புலன்ஸ்

சிறு வயதிலேயே இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த வெற்றிவேலன் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.  இந்நிலையில் வழக்கம் போல இன்று பள்ளிக்குச் சென்ற வெற்றிவேலன் வகுப்பறையில் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.

சிறுவன் பலி

இதனால் அதிர்ச்சி அடைந்த வகுப்பு ஆசிரியர், சக ஆசிரியர்கள் வெற்றிவேலனை உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து  போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!