25 அடி உயர மேம்பாலத்தில் பைக்கில் சென்ற கல்லூரி மாணவர் தவறி விழுந்து பலி!

 
 25 அடி உயர மேம்பாலத்தில் பைக்கில் சென்ற கல்லூரி மாணவர்  தவறி விழுந்து   பலி!

 கர்நாடக மாநிலத்தில்  பெங்களூருவில் பேகூர் சாலையில் விஸ்வப்ரியா நகர் பகுதியில் வசித்து வருபவர்  ஷ்ரேயாஸ் பாட்டில். 19 வயது கல்லூரி மாணவரான இவர்  பி.காம் படித்து வந்துள்ளார். இவர் அதிகாலை 3.45 மணிக்கு  அக்ஷய் நகரை சேர்ந்த தனது நண்பர் கே. சேத்தனுடன் பைக்கில் சென்றுள்ளார்.

இருவரும் ரிச்மண்ட் சர்க்கிள் ரெசிஸ்டன்சி சாலையை நோக்கி செல்லும் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென பைக் தனது கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் பக்கவாட்டு தடுப்பு சுவரில் மோதியது. இதில்  இருவரும் 25 அடி உயரப் பாலத்தில் இருந்து கீழே உள்ள சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.  

 25 அடி உயர மேம்பாலத்தில் பைக்கில் சென்ற கல்லூரி மாணவர்  தவறி விழுந்து   பலி!

அந்த கோர விபத்தில் இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டு கவலைக்கிடமான நிலையில் ஜெயின் ஜான்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் ஷ்ரேயாஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் சேத்தனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web