கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை... காதலன் வெறிச்செயல்!

 
ஷிபா

கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்தில் வசித்து வந்த ஷிபா, எம்.எஸ்.சி படித்து வந்தார். ஷிபா கல்லூரிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ​​அதே பேருந்தில் வந்த ஒரு இளைஞர், ஷிபாவிடம், உன்னிடம் தனியாகப் பேச வேண்டும் என்று கூறினார். இதனால் மாணவியும் அவரிடம் சென்று பேசினார்.

பின்னர் பேசிக் கொண்டிருக்கும் போதே தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் திடீரென ஷிபாவின் கழுத்தை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதனால் ஷிபாவின் கழுத்தில் இருந்து ரத்தம் வெளியேறி ஷிபா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.

ஷிபா - முபீன்

இது குறித்து தகவல் அறிந்ததும், போலீசார் அங்கு சென்று ஷிபாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, முபீன் என்ற இளைஞரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின.

ஷிபாவும் முபீனும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் ஷிபாவின் பெற்றோர் இவர்களது காதலை எதிர்த்தனர். பின்னர் ஷிபாவுக்கு வேறு ஒருவரை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர்.

ஷிபா

அதன் பிறகு, ஷிபாவும் தனது காதலனுடன் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில், கல்லூரிக்குச் சென்ற ஷிபாவிடம் முபீன் ஏதோ சொல்லி, அவளை தனியாக அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்ள மீண்டும் வற்புறுத்தி உள்ளார்.  ஷிபா திருமணத்திற்கு மறுத்ததால் ஷிபாவின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web