கடந்த 5 ஆண்டுகளில் முதல்முறையாக காங்கோ காய்ச்சல்... ஒருவர் பலி... சுகாதாரத் துறை எச்சரிக்கை!

குஜராத் மாநிலத்தில் ஜாம்நகரில் வசித்து வரும் கால்நடை வளர்ப்பாளர் மோகன் பாய் . இவர் கடந்த 21ம் தேதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்த மாதிரிகளை புனேவில் உள்ள ஆய்வகத்தில் பரிசோதனை செய்ததில் காங்கோ காய்ச்சல் வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது.
குஜராத் மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் முதல்முறையாக இந்த வகை வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது இதனையடுத்து உயிரிழந்தவரின் வீட்டின் சுற்றுவட்டாரத்தில் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த வகை வைரஸ் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு நேரடியாகவோ அல்லது சில வகை உண்ணி இனங்களினாலோ பரவுகிறது.
தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத இந்த நோய் அறிகுறிகளாக காய்ச்சல், உடல் வலி , தலை சுற்றுதல், தலைவலி, கண் எரிச்சல், தூக்கமின்மை, மன அழுத்தம், வயிற்றுவலி பாதிப்புகளும் வாய், தொண்டை, தோலில் தடுப்புகளும் ஏற்படும் என சுகாதாரத்துறை தெரிவிக்கிறது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!