நாளை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடக்கம்!!
நாளை ஜூலை 25ம் தேதி செவ்வாய்க்கிழமை மருத்துவப் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு தொடங்குகிறது. ஆன்லைன் மூலம் நடைபெறும் இந்தக் கலந்தாய்வில் மாநில ஒதுக்கீட்டில் உள்ள சுமார் 10000 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.தமிழகம் முழுவதும் நீட் தேர்வு எழுதிய சுமார் 40000 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். மேலும், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 27ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மருத்துவ படிப்புக்களை படிப்பதற்கு நீட் தேர்வு எழுத வேண்டியது அவசியம். ளுக்கான எம்பிபிஎஸ் இளநிலை மருத்துவம், முதுநிலை மருத்துவம், பட்டயப் படிப்பு, உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியல் தயாரித்தல், கலந்தாய்வு நடத்துதல் மற்றும் மாணவர் சேர்க்கை உட்பட தமிழக அரசின் தேர்வுக் குழுவால் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் இதன்மூலம் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டு முறையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உட்பட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 20ம் தேதி தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேபோல் எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கான முதல்கட்ட ஒதுக்கீட்டு ஜூலை 27, 28ம் தேதிகளில் ஆன்லைனில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் உட்பட அனைத்து மாநில மருத்துவக் கல்லூரிகளுக்கும் 15% இடங்கள் ஒதுக்கப்படுகின்றன, மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவோ, சேர்க்கை மையங்கள் மூலமாகவோ கலந்தாய்வில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.