ஆர்எஸ்எஸ் நிர்வாகி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு.. விசிக கொடியை நட்டது யார்?

 
ராமசாமி

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள வடக்கு ரிஷபனூர் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகியாகவும், தேசிய லோக் அதாலத் கமிட்டி உறுப்பினராகவும் இருந்து வருகிறார். 

இந்நிலையில் நேற்று ராமசாமி தனது சொந்த வீட்டில் தங்கி இருந்த நிலையில், அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். எனினும் அவர்கள் யாரும் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இன்று காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கேட்டில் மர்ம நபர்கள் சிலர் நாட்டு வெடி குண்டை வீசியுள்ளனர். 

ராமசாமி

ஆனால் அது வெடிக்காத நிலையில் வீட்டின் முன் பக்கம் கிடைந்துள்ளது. அதேநேரம் வீட்டின் சன்னல் கண்ணாடிகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வீட்டின் சுவற்றில் கருப்பு மையையும் மர்மநபர்கள் ஊற்றி சென்றுள்ளனர். வீட்டின் முன்புற கேட்டில் ஆங்காங்கே வி.சி.க. கட்சி கொடியையும் ஊன்றிவிட்டு சென்றுள்ளனர். 

ராமசாமி

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராமசாமி இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்மநபர்களை தேடி வருகின்றனர். அதேநேரம் விசிகவின் கொடியையும் நட்டுள்ளதால், உண்மையில் அந்த கட்சியினர் தான் இப்படி செய்தார்களா? அல்லது வேறு யாரும் திட்டமிட்டு இதுபோன்று செயல்பட்டார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

From around the web