ஸ்கூட்டர் மீது மாடுகள் முட்டியதில் குழந்தையோடு கீழே விழுந்த தம்பதியர்!

 
 ஸ்கூட்டர் மீது மாடுகள் முட்டியதில் குழந்தையோடு கீழே விழுந்த தம்பதியர்
 

 

காரைக்குடி மாவட்டத்தில் ஸ்கூட்டரில் மாடுகள் முட்டியதில் குழந்தையோடு கணவன், மனைவி கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சாலைகளில் திரியும் கால்நடைகளைப் பிடிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது.

காரைக்குடி மாநகராட்சியில் நாளுக்கு நாள் நாய்கள், மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவை சாலைகளில் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டுநர்கள் சிரமமடைந்து வருகின்றனர். மாடுகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதோடு அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. ஆனால், மாநகராட்சி நிர்வாகம் அவற்றை கண்டுகொள்ளவில்லை. நேற்று முன்தினம் இரவு 100 அடி சாலையில் இரண்டு மாடுகள் மோதிக் கொண்டன.

அப்போது மாடுகள் மோதியதில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் கீழே சாய்ந்தன. அங்கிருந்த வியாபாரிகள் மாடுகளை பல முறை விரட்டியும், சண்டை தொடர்ந்தது. அப்போது அவ்வழியாக வந்த ஸ்கூட்டர் மீது இரு மாடுகளும் மோதின. இதில் குழந்தையோடு வந்த கணவன், மனைவி கீழே விழுந்தனர். அவர்களை அங்கிருந்தோர் மீட்டனர். தற்போது இதுதொடர்பான வீடியோ சமூக வலை தளங்கில் பரவி வருகிறது. காரைக்குடியில் சாலையில் திரியும் மாடுகளைப் பிடிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

 

From around the web