மங்கல நிகழ்வுகள் பெருகும்!! சிவன்மலை உத்தரவு பெட்டியில் கன்றுடன் கூடிய பசு!!
திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில், ஆண்டவர் உத்தரவுப்பெட்டி பிரசித்தி பெற்றது. இந்த பெட்டியில் பக்தர்களின் கனவில் வரும் பொருட்கள் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது. இந்த பொருட்களின் தன்மைக்கேற்ப நாட்டின் வளம் அமையும் என்பது நீண்ட நெடுங்காலமாக பக்தர்களிடையே கடைபிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை .
திருப்பூர் மாவட்டம், காங்கயம் அடுத்த சிவன்மலையில் பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள ஆண்டவர் உத்தரவு பெட்டியில், இறைவன் பக்தர்களின் கனவில் வந்து, குறிப்பால் உணர்த்தும் பொருட்களை வைத்து வழிபாடு செய்வர். ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வருண, விருஷ்ப, தனுார் பாண, பாசுபதம் என, நான்கு அஸ்திரங்கள், ஆறு எலுமிச்சை பழம், ரூ101 ஆகியன வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சென்னை, பட்டவாக்கத்தில் வசித்து வரும் பக்தர் கனவில், கன்றுடன் கூடிய பசு சிலை வைக்க சொல்லி உத்தரவானது. இதன்படி நேற்று முதல் உத்தரவு பெட்டியில் இந்த சிலையை வைத்து பூஜை செய்யப்படுகிறது.''பால் வளம், மங்கல நிகழ்ச்சிகள் பெருகும் என்பதை குறிப்பதாக இது அமைந்துள்ளது'' எனக் கருத்து தெரிவித்துள்ளனர் சிவாச்சார்யார்கள்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?