கழிவறையில் பெண்ணை கற்பழித்த பிரபல கால்பந்து வீரர்.. அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்!
டானி ஆல்வ்ஸ் ஒரு பிரபலமான பிரேசிலிய கால்பந்து வீரர். இவர் முன்னாள் பார்சிலோனா வீரரும் கூட. இந்நிலையில், ஸ்பெயினில் உள்ள இரவு விடுதியில் பெண்ணை பலாத்காரம் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு, அவர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டு தற்போது சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
ஒரு காலத்தில் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக இருந்த டானி (வயது 40), தற்போது பெண்ணை கற்பழித்த குற்றத்திற்காக நான்கரை ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. விசாரணையின் போது, தான் நிரபராதி என்று கூறிய டானி, தனது இரண்டு குழந்தைகளை காரணம் காட்டி குற்றத்தில் இருந்து தப்பிக்க முயன்றார்.
டிசம்பர் 30, 2022 அன்று, பார்சிலோனா நைட் கிளப்பில் உள்ள கழிவறையில் 23 வயது பெண்ணை டானி கற்பழித்துள்ளார். பெண்ணின் விருப்பத்தின் பேரில் தான் தனிமையில் இருந்ததாக டானி கூறிய தகவல் முதலில் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், அதிகாரிகள் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் வலுக்கட்டாயமாக கழிவறையில் வைத்து பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அம்பலமானது.
கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்ட டானி மீதான வழக்கு விசாரணை தற்போது நிறைவடைந்து அவருக்கு நான்கரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் ஒரு விளையாட்டு வீரராக தனது வாழ்க்கையில் 41 கோப்பைகளை சேகரித்தார் மற்றும் அவரது ரசிகர்களால் நேசிக்கப்பட்டார். அவர் செய்த குற்றம் அவர் மீது கவனம் செலுத்தி இன்று சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!