மிதந்து வந்த படகில் கிடந்த 4 பெண் சடலம்.. ஷாக் ஆன அதிகாரிகள்!

 
முர்சியா

ஸ்பெயினின் முர்சியா நகருக்கு அருகே மத்தியதரைக் கடலில் படகு மிதப்பதை கடற்படையினர் கண்டனர். அருகில் சென்று பார்த்தபோது, 4 பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து மீட்புக் குழுவினர் படகை இன்று காலை கார்டேஜினா துறைமுகத்துக்கு இழுத்துச் சென்று  வந்தார்கள். படகில் இருந்த பெண்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களின் இறப்புக்கான காரணம் பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியவரும்.

அவர்கள் முதலில் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் என்றும், அங்கிருந்து படகில் சென்று ஸ்பெயினில் குடியேறும் போது இறந்திருக்கலாம் என்றும் தெரிகிறது. படகில் வேறு யாரும் இல்லை. அவர்கள் செல்லும் போது வேறு யாராவது அவர்களுடன் சென்றார்களா? என்ற விவரம் தெரியவில்லை. வறுமை, உள்நாட்டுக் கலவரம், மோதல்கள் மற்றும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் மேற்கு ஆபிரிக்காவில் இருந்து படகு மூலம் ஸ்பெயினை அடைய முயல்கின்றனர்.

அவர்களில் பெரும்பாலோர் அட்லாண்டிக்கில் உள்ள கேனரி தீவுகளுக்கு திறந்த படகுகளில் பயணம் செய்கிறார்கள். மொராக்கோ, அல்ஜீரியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து குடியேறியவர்கள் மத்திய தரைக்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களைக் கடந்து ஸ்பெயினின் பிரதான நிலப்பகுதிக்கு செல்ல முயற்சிக்கின்றனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆபத்தான பயணத்தில் இறந்துள்ளனர். இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை 15,351 புலம்பெயர்ந்தோர் படகு மூலம் ஸ்பெயினுக்கு வந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தை விட 4,000 பேர் அதிகமாகும். அவர்களில் பெரும்பாலோர் கேனரி தீவுகள் வழியாக வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web