கோவில் திருவிழாவில் முதுகில் அலகு குத்தி கிரேனில் தொங்கிய படி வந்த பக்தர்கள்!
தமிழகத்தில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரம் மகா மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் வகை வகையான அலகு குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கிரேன் அலகு, விமான அலகு, சுவாமி அலங்கார முதுகு அலகு, கிரேனில் தொங்கும் அலகு என பக்தர்கள் பல வகையான அலகுகள் குத்திக்கொண்டு தொங்கியபடி கோயிலைச் சுற்றி வந்தனர்.
இந்த திருவிழாவில் கமலாபுரம் உட்பட 18 பட்டி கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டுச் சென்றனர். அங்கு நடைபெற்ற ஆடலும் பாடலும் கலை நிகழ்ச்சியில், பக்தர்கள் அலகு குத்தி வரும்போது இரட்டை அர்த்த பாடலுக்கு நடனமாடியதாகக் கூறி, இரு தரப்பினர் மோதலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை விரட்டி அடித்தனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
