மீண்டும் இணையும் தனுஷ் - மாரிசெல்வராஜ் கூட்டணி.. மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகும் புதிய திரைப்படம் !
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘கர்ணன்’. இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றது. இதையடுத்து மாரி செல்வராஜ், உதயநிதி நாயகனாக நடிக்கும் ‘மாமன்னன்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
We are super excited to associate with @zeestudiossouth in bringing @dhanushkraja and @mari_selvaraj back together to create yet another cinematic revolution 💥#WunderbarFilms pic.twitter.com/RMeJM5HSIp
— Wunderbar Films (@wunderbarfilms) April 9, 2023
நடிகர் தனுஷை பொறுத்தவரை அவரது நடிப்பில் ‘நானே வருவேன்’ திரைப்படம் கடந்தாண்டு வெளியானது. அப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை. நேரடி தெலுங்கு படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இதையடுத்து அவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் மீண்டும் நடிகர் தனுஷூம் மாரிசெல்வராஜூம் இணையும் புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை தனுஷின் வொண்டார்பார் நிறுவனத்துடன் இணைந்து ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நடிகர் தனுஷின் திரை வரலாற்றில், மிகப்பெரும் பொருட்செலவில், மிகப்பிரமாண்டமாக இப்படம் உருவாகவுள்ளது.
பல்வேறு பிராந்திய திரைப்படத் துறைகளைச் சேர்ந்த பிரபல நடிகர்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து பணியாற்றவுள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.