ரசிகர்களை அதிர வைத்த தோனி! உற்சாகத்தில் சி.எஸ்.கே. ரசிகர்கள்!

 
ரசிகர்களை அதிர வைத்த தோனி! உற்சாகத்தில் சி.எஸ்.கே. ரசிகர்கள்!


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி . இவர் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் தலைவராக இருந்து வருகிறார். இவர் 2020ல் ஓய்வு பெற்ற பிறகும் சி.எஸ்.கே. அணிக்காக ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

அதன்படி, இந்த சீசனில் தோனி பங்கேற்று விளையாடி வரும் தோனி சி.எஸ்.கே. அணியை பிளே ஆப் சுற்றுக்கு தகுதிப் பெற வைத்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வைத்தாலும் தோனி அடுத்த ஐ.பி.எல். தொடரில் விளையாட மாட்டார் என சமூக வலைதளங்களில் செய்திகள் உலா வந்தன.

ரசிகர்களை அதிர வைத்த தோனி! உற்சாகத்தில் சி.எஸ்.கே. ரசிகர்கள்!


இந்நிலையில், ஆன்லைன் மூலம் ரசிகர்களுடன் தோனி கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் விளையாடுவேன். சென்னைக்கு மீண்டும் வந்து விளையாடுவேன். எனது கடைசி ஆட்டம் சென்னையில்தான் எனத் தெரிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

From around the web