"சாம்பார் வைக்கலையா?" தந்தை திட்டியதால் இளம்பெண் விபரீத முடிவு!

 
இளம்பெண் சாம்பார் தற்கொலை இளம்பெண் சாம்பார் தற்கொலை

கர்நாடக மாநிலத்தில் மிகச்சிறிய காரணத்திற்காக இளம்பெண் ஒருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவைச் சேர்ந்த நட்டேஸ் பூஜாரி என்பவர், தனது மனைவி பிரிந்து சென்ற நிலையில், 22 வயதான மகள் கவுசல்யாவுடன் வசித்து வந்தார். தந்தை மற்றும் மகள் இருவர் மட்டுமே அந்த வீட்டில் இருந்து வந்துள்ளனர்.

one side love காதல் தோல்வி இளம்பெண் மாணவி அதிகாலை தனிமை மன அழுத்தம்

சம்பவத்தன்று, நட்டேஸ் பூஜாரி சமையலுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கிக் கொடுத்துவிட்டு, சமைத்து வைக்குமாறு மகளிடம் கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். சில மணி நேரம் கழித்து அவர் வீட்டிற்குத் திரும்பியபோது, கவுசல்யா சமைக்காமல் இருந்ததைக் கண்டுள்ளார். குறிப்பாக, சாம்பார் வைக்காமல் அலட்சியமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தந்தை, மகளைக் கடுமையாகக் கண்டித்துத் திட்டியுள்ளார். தந்தையின் வசவுச் சொற்களால் மிகுந்த மனவேதனை அடைந்த கவுசல்யா, அவர் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

மாணவி இளம்பெண் சடலமாக சடலம் தற்கொலை கொலை

தகவலறிந்து வந்த போலீசார், கவுசல்யாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரு சிறிய குடும்பத் தகராறு மற்றும் சாம்பார் வைக்காதது போன்ற எளிய காரணத்திற்காக ஒரு இளம் உயிர் பறிபோயிருப்பது அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய இளைஞர்கள் மத்தியில் மன அழுத்தத்தைக் கையாளும் திறன் குறைந்து வருவதையும், மிகச்சிறிய விமர்சனங்களைக் கூடத் தாங்கிக்கொள்ள முடியாத மனநிலையில் இருப்பதையும் இச்சம்பவம் உணர்த்துகிறது. குடும்ப உறுப்பினர்களிடையே ஆரோக்கியமான உரையாடலும், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் தன்மையும் இத்தகைய விபரீத முடிவுகளைத் தடுக்க உதவும்.