டிஐஜி வருண்குமார் தரப்பில் நாம் தமிழர் கட்சியினர் மீது மீண்டும் வழக்கு!

 
டிஐஜி வருண்குமார் தரப்பில் நாம் தமிழர் கட்சியினர் மீது மீண்டும் வழக்கு
 

திருச்சி சரக டிஐஜி வருண்குமார் குடும்பத்தினரை அவதூறாக பேசியதாகவும் சமூக வலைதளங்களில் ராமலட்சுமி தவறான கருத்துக்களை பதிவிட்டதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, டிஐஜி வருண்குமார் திருச்சி நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, குற்றவியல் நீதிமன்றம் எண் 4ல், நீதிபதி விஜயா முன்பு, டிஐஜி வருண்குமார் தனது வழக்கறிஞர் முரளிகிருஷ்ணா உடன் ஆஜரானார்.

சீமான் மீது டிஐஜி சார்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை மே 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், சீமான் தரப்பு வாதங்கள் எழுத்துப்பூர்வமாக நீதிபதியிடம் முன்வைக்கப்பட்டது.

டிஐஜி வருண்குமார் தரப்பில் நாம் தமிழர் கட்சியினர் மீது மீண்டும் வழக்கு

மே எட்டாம் தேதி நடைபெறும் வழக்கு விசாரணையின் போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்டாயமாக ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டதாக டிஐஜி தரப்பு வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். 

கடந்த ஏப்ரல் 8ம் தேதி சீமான் ஆஜரான போது, பெரும்பாலான கார்களில் வந்த நாம்தமிழர் கட்சியினர் டிஐஜி காரின் அருகே காரை நிறுத்தி விட்டு, சீமான் வாழ்க என கோசமிட்டும் ராமஜெயம் வழக்கு என்ன ஆச்சு என எனக்கேட்டு மிரட்டல்விடுத்ததாகவும், இதுதொடர்பாக டிஐஜி தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்தார்.

டிஐஜி வருண்குமார் தரப்பில் நாம் தமிழர் கட்சியினர் மீது மீண்டும் வழக்கு

மணப்பாறை காவல் நிலையத்தில் பெரியார் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததாக ஜனவரி ஒன்பதாம் தேதி வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நேற்று 28ம் தேதி சீமான் மீது காவல் நிலையம் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டநிலையில், விரைவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web