சென்னை - திருச்செந்தூர் நேரடி ரயில் இயக்க வேண்டும்... கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்!

இது குறித்து அவர் தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளருக்கு அனுப்பி உள்ள மனுவில் "தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வேளாங்கன்னிக்கு செல்கின்றனர். குறிப்பாக செப்டம்பர் மாதம் நடைபெறும் திருவிழா மற்றும் மே மாத கோடை விடுமுறையில் அதிகமானோர் செல்கின்றனர். இந்த பக்தர்களின் வசதிக்காக தூத்துக்குடி- வேளாங்கன்னி இடையே நேரடி வாராந்திர ரயில் இயக்க வேண்டும். தூத்துக்குடி- புதுச்சேரி இடையே எந்த ரயில் வசதியும் இல்லாததால் இந்த ரயிலை புதுச்சேரி வரை நீட்டிக்க முடியும்.
திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு திருச்செந்தூர்- சென்னை இடையே நெல்லை, மதுரை, திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டி வழியாக புதிய நேரடி ரயில் இயக்க வேண்டும். திருச்சி - காரைக்குடி, காரைக்குடி - விருதுநகர், விருதுநகர் - காரைக்குடி, காரைக்குடி- திருச்சி ரயில்களை ஒருங்கிணைத்து தூத்துக்குடி- திருச்சி இடையே இன்டர்சிட்டி ரயிலாக தினமும் இயக்க வேண்டும்.
தூத்துக்குடி - பாலக்காடு - தூத்துக்குடி பாலருவி விரைவு ரயிலில் ஏசி பெட்டி இல்லாதது பெரும் குறையாக உள்ளது. எனவே, 2 பொது பெட்டிகளை குறைத்துவிட்டு ஒரு மூன்றடுக்கு ஏசி பெட்டியையும், ஒரு இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டியையும் உடனடியாக இணைக்க வேண்டும். அனைத்து ரயில்களுக்கும் தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும். திருச்செந்தூர் ரயில் நிலையத்தை பயணிகள் தேவைக்கு ஏற்ப மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி உள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!