பேருந்து ஓட்டுனரிடம் அதிரடி காட்டிய இயக்குநர் சேரன்... சாலையில் பரபரப்பு!
தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் இருந்து தினமும் புதுச்சேரிக்கு அதிக அளவில் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பேருந்துக்கும் 3 முதல் 5 நிமிட இடைவெளியில் புறப்பட்டு வருவதால் அந்த பேருந்துகளுக்குள் நேரம் கடைப்பிடிப்பதற்கான கால அவகாசம் மிகவும் குறைவு. இதனால் இந்த பேருந்துகள் அதிவேகமாக புதுச்சேரி சாலையில் செல்வது வழக்கம். அதேபோல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன்களை பயன்படுத்தி அதிக அளவில் ஒலி எழுப்பியவாறு இந்த பேருந்துகள் செல்கின்றன.

இந்நிலையில் புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்த இயக்குனர் சேரன் தன்னுடைய காரில் பெரிய கங்கணாங்குப்பம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது நீண்ட நேரமாக அதிக அளவில் ஒலி எழுப்பிய வண்ணம் ஒரு தனியார் பேருந்து வந்துள்ளது. அந்த தனியார் பேருந்துக்கு வழிவிட இடம் இல்லாத நிலையில் அதே பகுதியில் இயக்குனர் சேரனின் கார் வந்து கொண்டிருந்து.
அதிக அளவில் ஒலி தொடர்ந்து எழுப்பப்பட்டதை தொடர்ந்து அங்கு தனது காரை நடுரோட்டில் நிறுத்திய சேரன் அந்த பேருந்து ஓட்டுனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒதுங்குவதற்கு வழி இல்லாத சாலையில் அதிக ஹாரன் எழுப்பி எதற்கு மக்களுக்கு இடையூறு செய்கிறீர்கள் எப்படி ஒதுங்கி உங்களுக்கு வழிதர முடியும் என கேள்வி எழுப்பினார்.
இவை சாலையில் வாக்குவாதம் ஆகவே அந்த பகுதியில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் பொதுமக்கள் மற்றும் மற்ற பேருந்தில் வந்த பேருந்து நடத்துனர்கள் இறங்கி இயக்குநர் சேரனை சமாதானம் செய்தனர். அதன் பிறகு அவரது காரை வழியனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த பகுதியில் செல்லும் போதெல்லாம் தனியார் பேருந்துகள் அதிக அளவில் ஒலி எழுப்பி செல்வதாகவும் இதற்கு போக்குவரத்துக் காவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வைரலாக பரவி வருகிறது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
