மாற்றுத் திறனாளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை... தந்தையின் நண்பரால் விபரீதம்!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஹனுமன் நகர் பகுதியில் 14 வயது மாற்றுத்திறனாளி சிறுமி தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். ஏப்ரல் 27ம் தேதி இவருடைய பாட்டி காலமானார். இந்நிலையில் சிறுமிக்கு தேர்வு இருந்த காரணத்தினால் சிறுமியின் தந்தை தன்னுடைய நெருங்கிய நண்பரான வார்ஸ் அலி என்பவரிடம் தனது பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும்படி அறிவுறுத்தினார்.
அதன்படி அந்த சிறுமியும், அவளது சகோதரியும் வார்ஸ் அலியுடன் பள்ளிக்கு சென்றுவிட்டனர். தேர்வு முடிந்த பிறகு சிறுமியின் தந்தை சகோதரிகளை அழைத்து வர தனது மகனை அனுப்பி வைத்தார். அப்போது வார்ஸ் அலி மாற்றுத்திறனாளியான அந்த சிறுமியை மட்டும் தனியாக காரில் அழைத்துச் சென்று வெறிச்சோடிய இடத்தில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இரங்கல் நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிய சிறுமி தன் பெற்றோரிடம் தாங்க முடியாத மனவேதனையுடன் நடந்ததை கூறினார்.
தனது இயலாமையை பயன்படுத்தி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இது குறித்து யாரிடமும் பேசக்கூடாது என மிரட்டல் விடுத்ததாகவும் கூறினார். இதனை கேட்டு சிறுமியின் தந்தை அதிர்ச்சியடைந்த நிலையில் காவல் நிலையத்தில் வார்ஸ் அலி மீது புகார் கூறியுள்ளார். இந்த புகாரின் படி காவல்துறையினர் 24 மணி நேரத்தில் அவரை கைது செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!