கொளுத்தும் கோடை வெயில்... இந்த தவற மட்டும் செய்யாதீங்க... மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கை!
இந்தியாவின் பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இந்த கடுமையான வெயிலை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஏப்ரல் - ஜூன் வரை நாட்டின் பல பகுதிகளில் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை வித்துள்ளது. அதே நேரத்தில் வெப்பத்திலிருந்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சுகாதார அமைச்சகம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “ வெப்ப அலைகளால் உருவாகும் வெப்பம் தொடர்பான நோய்களைச் சமாளிப்பதற்கான தயார்நிலையை மதிப்பிடுவதற்கும், வரவிருக்கும் கோடை காலத்திற்கான செயல் திட்டத்தைப் பற்றி விவாதிப்பதற்கும் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் கடும் வெப்பத்தை சமாளிக்க சுகாதார அமைச்சகம் சில வழிகாட்டும் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கோடை காலத்தில் செய்ய வேண்டியவை பற்றியும் செய்யக் கூடாதவை குறித்தும் சில தகவல்களை பதிவிட்டுள்ளது.
செய்ய வேண்டியவை
நீரேற்றமாக இருக்கவும்
நேரடி சூரிய ஒளியைத் தடுக்கவும்
பிற்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும்
செய்யக் கூடாதவை
பிற்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கவும்
சூரிய ஒளியில் வேலை செய்வதை தவிர்க்கவும்
பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை சமைப்பதை தவிர்க்கவும்
குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளை கவனமாக பார்த்துக் கொள்ளவும்.
மது, டீ, காபி, சர்க்கரை கலந்த பானங்களை தவிர்க்கவும்.
வெறுங்காலுடன் நடக்காதீர்கள்
இணை நோய்கள் இருப்பவர்கள் தனிமையில் வாழும் முதியவர்கள் ஆரோக்கியத்தை தினமும் கண்காணிக்கவும்
வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். திரைச்சீலைகள், ஷட்டர்கள் அல்லது சன்ஷேட்கள் மற்றும் இரவில் ஜன்னல்களைத் திறந்து வைக்கவும்
பகலில் கீழ் தளங்களில் இருக்க முயற்சி செய்யுங்கள்
உடலை குளிர்விக்க மின்விசிறி மற்றும் ஈரமான ஆடைகளை பயன்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!