அமாவாசை தினத்துல மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீங்க!

அமாவாசை தினத்தில் நாம் சரியாக செய்யாவிட்டாலும் கூட பரவாயில்லை ஆனால் தவறாக சில விஷயங்களை எல்லாம் செய்யவே செய்யாதீங்க. அது எதிர்மறையாக சென்றுவிடும்.
அமாவாசை தினத்தில் விரதம் இருந்து, படைத்து, எள் தண்ணீர் இறைப்பது நமது பித்ருக்களை திருப்திபடுத்தும். ஆனால் அமாவாசையன்று சில காரியங்களைச் செய்ய கூடாது என்பதும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
மாதத்தின் அனைத்து நாட்களுமே அதிகாலையில் வீட்டைச் சுத்தம் செய்து, வாசலில் கோலமிட்டு, விளக்கேற்றி வழிபடுவது சிறப்பான பலன்களை தரும். ஆனால் அமாவாசையன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது என்கின்றனர் பெரியோர்கள்.
அமாவாசை தினத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து காகங்களுக்கு அன்னமிட்ட பின் வாசலில் கோலமிடுவதில் தவறில்லை. அல்லது அன்றைய தினம் முழுவதுமே வாசலில் கோலம் போடாமல் இருக்கலாம்.
விநாயகருக்கு சதுர்த்தி. முருகருக்கு சஷ்டி. பெருமாளுக்கு ஏகாதசி. பைரவருக்கு அஷ்டமி. அம்பிகைக்கு பௌர்ணமி என்பதைப் போலவே பித்ருக்களுக்கு அமாவாசை. அதனால் தான் தினமும் இல்லாவிட்டாலும், அமாவாசை திதி அன்று மட்டுமாவது தான தருமங்களைச் செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அமாவாசையில் செய்கின்ற தர்ப்பணம் மற்றும் தானங்களால் முன்னோர்களின் தாகமும், பசியும் நிவர்த்தியாவதுடன் குலம் செழிக்கும். நம் இருப்பிடத்தைத் தேடி வரும் முன்னோர்கள் பசி, தாகம் தீர எள்ளு கலந்த நீரினால் தர்ப்பணம், சிராத்தம் செய்யும் போது, ஏற்றுக்கொண்டு நம்மை ஆசிர்வதிக்கிறார்கள்.
அமாவாசையில் வாசலில் கோலம் போடுவது, பூஜையறையில் இருக்கும் மணி எழுப்பும் ஒலி, இரும்புப் பாத்திரத்தின் ஒலி இவற்றால் பித்ருக்களின் வருகை தடைபடும். இதனால் தர்ப்பணம் முடிந்து காகத்திற்கு அன்னமிடும் வரை அதாவது வீட்டுக்கு பித்ருக்கள் வந்து நம்மை ஆசிர்வதித்து செல்லும் வரை, வீட்டு வாசல் மற்றும் பூஜை அறையிலோ கோலம் போடுவதையும், மணியடித்து ஒலி எழுப்பி பூஜைகள் செய்வதையும் தவிர்க்க வேண்டும் என்கின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!