கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்!

 
நயினார் நாகேந்திரன்
சமீபத்தில் அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்திருப்பதாக  மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்திருந்தார்.  தொண்டர்கள் நிர்வாகிகள் மட்டுமல்லாது மற்ற கட்சியினர் என பலரும் தங்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

தேர்தல் கூட்டணி , கூட்டணி மட்டுமே, கூட்டணி அரசு இல்லை என  அதிமுக பொதுச்செயலார் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார்.  அதிமுக – பாஜக கூட்டணி பற்றி தொண்டர்கள் யாரும் சமூக வலைதளத்திலோ, தொலைக்காட்சியிலோ, பொதுவெளியிலோ பேச வேண்டாம் என கூறியிருந்தார்.  

நயினார் நாகேந்திரன்
தற்போது அதே கருத்தை பாஜக தொண்டர்களிடத்தில் அக்கட்சி மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ” பாஜகவுக்கு எத்தனை சீட் என நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. நானும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. நமக்கு ஒரு தலைமை இருக்கிறது. அந்த தலைமைக்கு கட்டுப்பட்டு, அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதனை கேட்க வேண்டும். இன்று கூட பத்திரிக்கை பேட்டியில் ரங்கராஜ் பாண்டே என்னிடம் கேள்வி கேட்டார். நீங்கள் தானே தலைவர் நீங்கள் தானே முடிவு எடுக்க வேண்டும் என சொன்னார்.
நான் அவரிடம், நான் மாநிலத் தலைவர். ஆனால், எங்களுக்கு மேலே ஒரு தலைமை இருக்கிறது. அவர்கள் முடிவுக்கும் நாம் கட்டுப்பட்டாக வேண்டும். அவர்களின் முடிவு தான் எங்கள் இறுதி முடிவு. உறுதியான முடிவு எனக் கூறினேன். அதிமுக கூட்டணி பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். தற்போது பாஜக எம்எல்ஏ 4 பேர் இருக்கிறோம்.

நயினார் நாகேந்திரன்
அதிமுக கூட்டணி குறித்து தொண்டர்கள் எந்த கருத்தும் சொல்லக் கூடாது. தயவு செய்து எந்த கருத்தும் சொல்லாதீங்க. கூட்டணி விவரங்களை அமித்ஷா – எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பார்த்துக்கொள்வார்கள். ” என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்  தொண்டர்கள் மத்தியில் பேசியுள்ளார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web