உக்ரைன் பயங்கர டிரோன் தாக்குதல்... ரஷியாவில் 12 பேர் பலி !

 
ட்ரோன்

உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் நான்கு ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், இதில் ஆயிரக்கணக்கான மக்கள் இதுவரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ஆயுதம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொண்ட போதிலும், அந்த முயற்சி தோல்வியடைந்ததால் போர் இன்னும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ரஷியாவின் தத்தாரிஸ்தான் மாகாணம் நிஸ்னேகாம்ஸ்க் நகரத்தில் உள்ள குடியிருப்புகள் மீது உக்ரைன் இன்று அதிகாலையில் திடீரென்று டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் அப்பகுதியில் வசித்து வந்த பன்னிரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 39 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்று வருவதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

Russia hits Ukraine with the largest drone-and-missile attack of the war so far - OPB

தொடர்ந்து அதிகரித்து வரும் இது போன்ற வன்முறைச் சம்பவங்கள் உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதுடன் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை முடக்கியுள்ளன. அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல்களுக்கு உலகத் தலைவர்கள் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். போரின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் இந்த விவகாரம் சர்வதேச அளவில் மிகப்பெரிய அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.