குடிப்பழக்கத்தால் மக்களுக்கு சேவை செய்ய முடியல!! கண்கலங்கிய ரஜினி!!

 
ஜெயிலர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் அடுத்த படம் ஜெயிலர். இந்த திரைப்படம் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் அடுத்தமாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாநேற்று மிக பிரம்மாண்டமாக டைபெற்றது. இந்த விழாவில் ரஜினி நீண்ட நேரம் உரையாற்றினார். அதில்  “என் சினிமா பயணத்தில் இயக்குநர்கள் எஸ்.பி. முத்துராமன், மகேந்திரன், ராஜசேகரன், கே.எஸ். ரவிக்குமார் போன்ற இயக்குநர்களால்  நான் வளர்ந்தேன். 

ஜெயிலர்

1977வது ஆண்டு தயாரிப்பாளர் தாணு எனக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்தபோது வேண்டாம் என மறுத்தேன். அப்போது நான் பயப்படுவதாக நிறைய பேர் சொன்னார்கள். என் சினிமா பயணத்தில் நிறைய வெறுப்பு, எதிர்ப்புகளை சம்பாதித்தேன். அவை இப்போதிருக்கும் இளைய பிள்ளைகளுக்கு தெரிந்திருக்காது என்றே நினைக்கிறேன்பெங்களூருவில் நான் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, அதிக குடிப்பழக்கம் இருந்தது. இது வேண்டாம் என அண்ணன் சொன்னார். இந்தப் பழக்கத்தால் நான் இழந்தது நிறைய. என் வாழ்க்கையே ஒரு கட்டத்தில் சூன்யமானது. ஒருவேளை, இந்தப் பழக்கம் இல்லாமல் இருந்திருந்தால் இதை விட பெரிய இடத்தில் இருந்திருப்பேன்.

ஜெயிலர்

இந்தப் பழக்கத்தால் மக்களுக்கு சேவை செய்ய முடியவில்லை. அதனால், யாரும் தயவு செய்து குடிக்காதீர்கள்’ என தான் அரசியலுக்கு வராமல் போனது குறித்து மறைமுகமாக பேசினார் ரஜினி.அவர் மேலும் பேசுகையில், ‘குடிப்பதினால் உங்கள் உடல்நலம் பாதிக்கப்படுவதோடு குடும்பமும் வீணாகும். குடிப்பவர்களுடன் சேராதீர்கள். அதையும் மீறி குடிக்கத் தோன்றும் நேரத்தில் வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு தூங்கி விடுங்கள். நிச்சயம் 10 நாட்களில் மாற்றம் வரும்’ என ரசிகர்களுக்கு ரஜினி விடுத்த வேண்டுகோள் இப்போது கவனம் பெற்று வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web