தொடர் விடுமுறையால்... சுற்றுலா தலங்களில் குவிந்த மக்கள்!

நாமக்கல், சேலம், திருச்சி ஆகிய 3 மாவட்ட எல்லையில் கிழக்கு மலை தொடர்ச்சியில் கொல்லிமலை உள்ளது. மூலிகை வளம் நிறைந்த மலை என்பதாலும், குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுவதால், இங்கு ஆண்டு முழுவதும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகம் இருக்கும். விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட பயணிகள் வருகை அதிகரிக்கும்.
இதன் மூலம் கொல்லிமலை பகுதியில் இயற்கையாக விளையும் பழங்கள் மற்றும் தானியங்கள் விற்பனை சந்தையில் வர்த்தகமும் களைகட்டும். இந்நிலையில், புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகை, ஞாயிற்றுக் கிழமை தொடர் விடுமுறையைத் தொடர்ந்து கொல்லிமலையில் கடந்த இரு நாட்களாக வழக்கத்தை விட சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது.
பல்வேறு ஊர்களிலிருந்து நேற்று வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் கோடைக்கு இதமான குளிர்ந்த சீதோஷ்ண நிலையை ரசித்தனர். மேலும், கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழை காரணமாக அங்குள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி மற்றும் நம் அருவிகளில் மிதமான நீர்வரத்து இருந்தது. இந்த அருவிகளில் பயணிகள் குளித்து மகிழ்ந்து, பல்வேறு இடங்களுக்கு சென்று இயற்கை அழகை ரசித்தனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!