காலையில் பரபரப்பு... நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
இன்று காலை அக்டோபர் 8ம் தேதி பிரபல நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் கிரீன்வேஸ் சாலை - அபிராமிபுரத்தில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. 2 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் துல்கர் சல்மான் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். துணை ராணுவப் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

அரசுக்கு முறையாக வரி செலுத்தாமல் உயர் ரக கார்களை இறக்குமதி செய்யும் முறைகேடுகளைக் கண்டறிய இந்தியா முழுவதும் 'ஆபரேஷன் நும்கூர்' என்ற பெயரில் பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக செப்டம்பர் 23 ம் தேதி கொச்சியின் பணம்பிள்ளி நகரில் உள்ள துல்கர் சல்மான், பிருத்விராஜ் மற்றும் எலம்குளத்தில் உள்ள மம்மூட்டி வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, துல்கர் சல்மானின் 2 கார்களை பறிமுதல் செய்தனர்

பறிமுதல் செய்யப்பட்ட 39 கார்களில் மற்றவர்களின் 33 கார்கள் திருப்பி ஒப்படைக்கப்பட்ட நிலையில், விசாரணை நிலுவையில் இருப்பதால் துல்கர் சல்மானின் கார்கள் மட்டும் விடுவிக்கப்படவில்லை.இந்த நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
