இரண்டாக பிளக்கும் பூமி.. புதிய கண்டம், புதிய கடல் உருவாக போவதாக விஞ்ஞானிகள் அறிவிப்பு!

 
புது கடல்

பூமியின் மேற்பரப்பிற்கு அடியில் உள்ள டெக்டோனிக் தட்டுகளின் இயக்கத்தின் அடிப்படையில் பூமி உருவானது என்று அறிவியல் கூறுகிறது. இந்த டெக்டோனிக் தகடுகளால் உலகில் புதிய கடல் உருவாகும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆப்பிரிக்காவின் தென்கிழக்கு பகுதியில், கண்டத்தை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கும் பிளவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன் காரணமாக, ஆப்பிரிக்காவில் புதிய கடல் உருவாக வாய்ப்புள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகில் ஏற்கனவே 5 கடல்கள் உள்ள நிலையில் இது ஆறாவது பெருங்கடலாக மாற உள்ளதாக கூறப்படுகிறது. கிழக்கு ஆபிரிக்காவில் பிளவு அமைப்பு என்று அழைக்கப்படுவது 2005 இல் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் தி எர்த் அறிக்கையின்படி, இப்பகுதி சுமார் 22 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாகக் கூறப்படுகிறது. பூமியில் தற்போது பசிபிக், அண்டார்டிக், ஆர்க்டிக், இந்திய மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்கள் உள்ளன. இந்நிலையில், ஆறாவது புதிய கடல் உருவானால், புவியியலில் கடும் மாற்றத்தை உருவாக்கும் என கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக, டெக்டோனிக் தட்டுகள் ஒன்றுக்கொன்று விலகிச் செல்வது விஞ்ஞானிகளின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. கிழக்கு ஆப்பிரிக்க பிளவு இரண்டு டெக்டோனிக் தகடுகளின் விளைவு என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். கிழக்கில் உள்ள சோமாலி தட்டு மற்றும் மேற்கில் நுபியன் தட்டு காரணமாக இது நிகழ்கிறது. இந்த இரண்டு தட்டுகளும் விலகிச் செல்லும்போது விரிசல் ஆழமடைகிறது.

தென் அமெரிக்காவும் ஆப்பிரிக்காவும் தனித்தனி கண்டங்களாகப் பிரிந்தபோது மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற நிகழ்வு காணப்பட்டது என்று ஜெருசலேம் ஊடகம் தெரிவித்துள்ளது. இந்த தட்டுகள் வருடத்திற்கு சில மீட்டர் தூரம் நகர்ந்து வருவதாக கூறப்படுகிறது. எத்தியோப்பியா, உகாண்டா போன்ற நிலத்தால் சூழப்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில் கடற்கரைகள் உருவாகி வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். விரிசல்கள் வருடத்திற்கு 0.7 மிமீ என்ற அளவில் வளர்ந்து வருவதாக மற்றொரு அறிக்கை கூறுகிறது.

"ஏடன் வளைகுடா மற்றும் செங்கடல் ஆகியவை அஃபார் பகுதியையும் கிழக்கு ஆப்பிரிக்க பிளவு பள்ளத்தாக்கையும் வெள்ளத்தில் மூழ்கடித்து புதிய பெருங்கடலை உருவாக்கும். கிழக்கு ஆப்பிரிக்காவின் அந்தப் பகுதி அதன் சொந்த சிறிய கண்டமாக மாறும்,” என்கிறார் கலிபோர்னியா பல்கலைக்கழக எமரிட்டஸ் பேராசிரியர் மாசிபிள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள் 

From around the web