திபெத்தில் திடீர் நிலநடுக்கம்... ரிக்டர் 4.1 ஆக பதிவு!

சீனாவில் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் அமைந்துள்ளது. இமயமலையின் வடக்கு பகுதியில் உயரமான இடத்தில் திபெத்தில் 7ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் ஷிகாட்சே நகரை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலநடுக்கத்தால் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், திபெத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 9.57 மணிக்கு இந்திய நேரப்படி ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகி இருப்பதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
100 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம், 34.30 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 89.35 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!