இந்தோனேஷியாவில் 6 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... பீதியில் பொதுமக்கள்!
உலகின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது.அந்த வகையில் இந்தோனேசியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பெரும் பதற்றம் அடைந்துள்ளனர்.
நிலத்திற்கு அடியில் 9.1 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியிருப்பதால் அந்நாட்டு மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் அதிர்ந்தன.
அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தற்போது வரை தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் சில இடங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!