ஈஸ்டர் பிரார்த்தனை... வீட்டின் கதவை உடைத்து 14½ பவுன் நகை திருட்டு... மர்ம நபர்கள் கைவரிசை!

தூத்துக்குடி கான்வென்ட் சாலையைச் சேர்ந்தவர் நசரேன் மகன் ஜாக்சன் (65). இவர் குடும்பத்தினருடன் ஈஸ்டர் பண்டிகை பிரார்த்தனைக்காக தேவாலயத்துக்கு நள்ளிரவு சென்றுவிட்டு, நேற்று அதிகாலை வீட்டுக்கு வந்தார். அப்போது, வீட்டின் முன்பக்கம் கதவை உடைக்கப்பட்டு கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த சுமார் 14½ பவுன் நகைகள் திருடு போயிருந்தது. இதுகுறித்து ஜாக்சன்அளித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!